‘பிடிக்கலைன்னா சுதந்திரமா விலகி போயிடனும்’ – தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்திற்கு கருத்து தெரிவித்த பிரபல இயக்குனர்!!

0

தொடர்ந்து பல திரை பிரபலங்களும் தற்போது விவாகரத்து பெற்று வருகின்றனர். இந்த நிலையில் காதல், திருமணம், விவகாரத்து குறித்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

திருமணம் முதல் விவாகரத்து வரை

ஹிந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக ராம்கோபால் வர்மா வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து தனது கருத்தை பதிவிட்டு வந்தார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரின் விவாகரத்து செய்திக்கு பிறகு ராம்கோபால் இதனை குறித்து சில தகவலை ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

திருமணம் தான் ஒருவரின் காதலை விரைவில் கொன்று விடுகிறது. முக்கிய பிரபலங்களின் பிரிவு தான் திருமணத்தின் அபாயத்தை இளைஞர்களுக்கு உணர்த்துகிறது. திருமணத்திற்கு பிறகு காதல் சில நாட்களே நீடிக்கிறது. அதற்கு பிறகு கட்டாயத்தின் பேரில் மட்டுமே இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். திருமணம் என்பது இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அமைதியான முறையில் வாழ்க்கையை நகர்த்த வேண்டும்.

முன்னோர்களால் நம் மீது தினிக்கப்பட்ட தீய பழக்கம் தான் திருமணம். அது இன்று வரை சோகத்தை மட்டுமே கொடுத்து வருகிறது. பிடிக்கவில்லை என்றால் சுதந்திரமாக விலகிவிட வேண்டும் என்று தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்களை பலரும் ஆதரித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here