2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மார்ச் 31 முதல் மே 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் கடந்த ஆண்டு சொதப்பிய சென்னை, மும்பை அணிகள் புதிய உத்வேகத்துடன் களமிறங்க உள்ளது. இந்நிலையில் IPL போட்டியின் இறுதிக்கட்டத்தில் டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த போட்டிக்கு ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளதால் வீரர்கள் IPL பிளே ஆஃப் ரவுண்டோடு இங்கிலாந்துக்கு செல்ல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய அணியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகும் பட்சத்தில் IPL பிளே ஆஃப் ரவுண்டோடு பயிற்சிக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
இதனால் ரோஹித், விராட் போன்ற முன்னணி வீரர்கள் வெளியேறும் பட்சத்தில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என IPL அணி நிர்வாகிகள் BCCI இடம் கதறி வருகின்றனர். மேலும் ஜூன் முதல் வாரத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே சுத்தி சுத்தி IPL போட்டிக்கு முட்டுக்கட்டையாக தொடர்கள் உள்ளதால் IPL தேதிகளை மாற்றி அமைக்க BCCI பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.