Saturday, April 20, 2024

ஒரு மாதத்திற்கு பிறகு சொந்த மண்ணிற்கு திரும்பிய லாஸ்லியாவின் தந்தை உடல் – சோகத்தில் குடும்பம்!!

Must Read

பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உடல் கனடாவில் இருந்து தற்போது தான் இலங்கைக்கு வந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒரு மாதத்திற்கு பிறகு அவரது உடல் அவரது சொந்த மண்ணிற்கு வந்துள்ளது.

பிக் பாஸ் புகழ் லாஸ்லியா:

விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 3” நிகழ்ச்சி மூலமாக புகழ் அடைந்தவர், லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த அவர் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தார். பின், பிக் பாஸ் இல் அறிமுகமாகி பெரும் புகழ் பெற்றார். தற்போது 3 படங்களில் அவர் கமிட் ஆகியுள்ளார். அவரது முக்கிய படமான “பிரெண்ட்ஷிப்” என்ற படம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இப்படியான நிலையில் அவரது தந்தை மரியநேசன் கனடாவில் தான் தங்கிருந்த அறையில் சடலமாக கடந்த 15 ஆம் தேதி மீட்கப்பட்டார். தூக்கத்திலேயே அவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. தனது தந்தை இறந்த செய்தியை அறிந்த லாஸ்லியா உடனடியாக கனடாவிற்கு விரைந்தார். அங்கு கொரோனா பரவல் காரணமாக அவர் 14 நாட்கள் தனிமைக்கு உட்படுத்தப்பட்டார்.

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி – கல்லூரிகள் மூடப்படுமா??

தற்போது தான் லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கைக்கு வந்துள்ளது. அவருக்கு கிறிஸ்தவ முறைப்படி ஈம காரியங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது வீட்டில் அவரது தந்தைக்கு பூச்செண்டுகள், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு தற்போது அனைவரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சிறையில் இருக்கும் முதல்வர் கெஜ்ரிவால் சாப்பிட்டது இதுதான்., அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு மறுப்பு!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை, சமீபத்தில் கைது செய்தது. அதைத்தொடர்ந்து ஜாமீன் கிடைக்காமல் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -