பொதுவாக மக்கள் தங்களின் வருமானத்தை வங்கி மற்றும் நகைகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தற்போது நகைக்கடை வியாபாரம் சூடு பிடித்து வருகிறது. அந்த வகையில் மக்கள் தங்களது மாத வருமானத்தில் இருந்து சிறிய பங்கை நகைக்கடையில் முதலீடாக செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில் தமிழகம் முழுவதும் பல கிளைகளுடன் இயங்கி வந்த பிரணவ் என்ற நகைக்கடை திவாலான நிலையில் கடந்த மாதம் கடை மூடப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் இதன் உரிமையாளர் கடந்த மாதம் தலைமறைவாகி இருந்தார். இதை தொடர்ந்து இக்கடையில் முதலீடு செய்திருந்தவர்களின் 47 கோடி ரூபாய் பணத்தை இதன் உரிமையாளர் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரணவ் கடையின் உரிமையாளர் மதன் மற்றும் அவரது மனைவி மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 பவுன் நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? பரந்த கோரிக்கை!!!