தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது தயவு தாட்சண்யம் காட்டாதீங்க – சுகாதாரத்துறை கிடுக்குபிடி!!

0

தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுகாதாரத்துறை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அபராதம் போடுங்க :

தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் ஸ்டாலின் அண்மையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாட்டில் 3 ம் அலை பரவல் தொடங்கிவிட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேற்று தெரிவித்தார். இதனால், பல இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுகாதாரத்துறை செயலர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விதிமுறைகளை மீறுவோர் மீது தயவு தாட்சண்யம் காட்ட வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வருகிற ஜனவரி 10ம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here