ஓமிக்ரான் தொற்று இப்பொழுது தமிழகத்தில் அதிகமாக பரவி வரும் நிலையில் தற்போது ஞாயிறு ஊரடங்கிற்கு அடுத்து மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வந்த நிலையில் இப்பொழுது அதன் மூன்றாவது அலையான ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுத்து வருகிறது. தென்னாபிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட இந்த ஓமிக்ரான் தோற்றால் இதுவரை இந்த 1730 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு இப்பொழுது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாரத்தில் இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்திருந்தது. அதுமட்டுமில்லாமல் இரவு நேர ஊரடங்கையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் எந்த துறைகளில் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடைகள் வணிக வளாகங்கள் அனைத்து சேவைத்துறை, தனியார் நிறுவன பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்