ஓமைக்ரான் தொற்று எதிரொலி – தலைநகரில் வார இறுதி நாள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்!!

0

தலைநகர் டெல்லியில் வார இறுதி நாள் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அறிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கூடுதல் கட்டுப்பாடுகள் :

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. மேலும், இந்த வைரஸின் உருமாறிய ஓமைக்ரான் பரவலும் மிகவும் தீவிரம் எடுத்துள்ளது. இதனால், பல மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நம் நாட்டின் தலைநகர் டெல்லியில், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை இந்த முடக்கம் அமலில் இருக்கும் எனவும், இந்த நேரத்தில் அத்தியாவசிய செயல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில், கடந்த 10 நாட்களில் 10,000 அதிகமான நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 350 நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர் என்றும், 124 நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் படுக்கை தேவைப்படுகிறது எனவும் அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மேலும், அரசு மற்றும் தனியார் அலுவலக 50 சதவீத பணியாளர்கள் சுழற்சி முறையில் வேலை செய்வார் என்றும் அறிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here