இவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும் – வெளியான புதிய அறிவிப்பு!!

0

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை அமலாகவுள்ள பொது முடக்கத்தில் இருந்து ஒருசில நபர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு விலக்கு:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனால், ஜனவரி 6ம் தேதியான இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வருகிற ஜனவரி 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் நபர்கள் தகுந்த ஆதாரங்களை காட்டி பயணம் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கின் போது, போட்டி தேர்வுகளில் பங்கேற்க செல்வோர்க்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

அரசின் போட்டித் தேர்வுகளான யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் பங்கேற்க செல்வோர் தங்கள் ஹால்டிக்கெட்டை காட்டி பயணம் செய்து கொள்ளலாம் எனவும், அவர்களுக்கு காவல் துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here