தமிழகத்தில் மீண்டும் work from home-ஆ?? சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் ஏற்படுமா?? என்பது குறித்து தற்போது சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

தமிழகம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா கடந்த சில நாட்களாகவே மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக மக்களை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. மேலும் தமிழகத்தில் தற்போது தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னையில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தற்போது உயர்கல்வி பள்ளிகள் (12ம் வகுப்பு தவிர்த்து) மற்றும் கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடுவில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. கொரோனா அதிகமாக பரவுவதற்கு இதுவும் ஓர் முக்கிய காரணம். தற்போது தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் ஏற்ப்படவுள்ளதா என்பதை பற்றி சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

அதன்படி அவர் கூறியதாவது, தமிழக மக்கள் கொரோனா அச்சம் இல்லாமல் மிக அலட்சியமாக இருந்து வருகின்றனர். மேலும் தேர்தலுக்கு பின்பு பொதுமுடக்கமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பொதுமுடக்கம் இருக்காது, கட்டுப்பாடுகள் இருக்கலாம் என்று தெரிவித்தார். மேலும் நிறுவனங்கள் அனைத்தும் Work from Home பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.

 

மேலும் விரைவில் தமிழக அரசே 50 சதவீத ஊழியர்களுக்கு Work from Home உத்தரவிட வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தமிழக்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு மற்றும் விழாக்களுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். மேலும் கட்டுப்பாடு பகுதிகளில் நடைமுறைகள் தீவிரமாக்கப்படும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here