கொரோனா நோய்பரவல் எதிரொலி – மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிப்பு!!

0

தமிழகம், புதுவை உட்பட பல பகுதிகளில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக கடுமையாக கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது புதுவையில் ஊரடங்கு நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு:

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த ஆண்டு வீசிய முதல் அலையை விட மிக அதிகமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தற்போது மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றினை தடுப்பதற்கு சுகாதாரத்துறையினர் தொடர்ந்து பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த சில நாட்களாகவே புதுவையில் தொடர்ந்து அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் அங்கு கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்த பாடில்லை.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை – வானிலை அறிக்கை!!

இதன் காரணமாக அங்கு ஏற்கனவே மே மாதம் 3ம் தேதி வரை தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மேலும் தற்போது அங்கு இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் புதுவை பகுதிகளில் இன்று முதல் வருகிற மே மாதம் 10ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படவுள்ளதாக புதுவை துணைநிலை ஆளுநரான தமிழிசை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here