இன்று முதல் ஏப்ரல் 26 வரை முழு ஊரடங்கு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

0

நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு மிக அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பல வகையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவு:

நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் நாட்டில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலில் இருந்து வருகிறது. மேலும் தற்போது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி பணிகள் மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறையினர் கொரோனா நோய் தொற்றினை விரட்டுவதற்காக முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டெல்லியில் கடந்த சில நாட்களாகவே மிக அதிகமான அளவில் கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அங்கு தற்போது கொரோனா பாதிப்பின் விகிதம் 29.74% ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது டெல்லியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கின் போது பேருந்துகள் இயக்கப்படும் – போக்குவரத்துத்துறை அதிரடி!!

அதன்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, இன்று(ஏப்ரல் 19) இரவு முதல் வருகிற ஏப்ரல் 26ம் தேதி காலை வரை முழுமையமான ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்தார். இதனால் ஊரடங்கு நாட்களில் தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணி புரிய வேண்டும் என்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் அத்யாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவித்துள்ளார் டெல்லி முதல்வர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here