அதிகரிக்கும் கொரோனா – தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு? – முதல்வர் இன்று ஆலோசனை!!

0

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை அமலில் இருக்கும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசிக்கிறார்.

மே 10 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. தமிழக அரசு எடுத்த தீவிர முயற்சிகளால் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. எனவே மக்களின் தேவைகளுக்கு ஏற்ப ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு நாளையொடு அதாவது ஜூலை 31 ஆம் தேதியோடு முடிவடைகிறது.

ஏற்கனவே திரையரங்கு, பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு இன்னும் தமிழகத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர்,  மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பெருநகரங்களான சென்னை, கோவை மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் சில கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here