ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!!

0
ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!!
ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!!

கொரோனா இரண்டாம் அலையின் பரவல் பலமாக இருக்கும் காரணத்தினால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் நிலையின் தாக்கம் அதிகம் இருப்பதால் மகாராஷ்டிரா,பீகார் போன்ற மாநிலங்களில் ஊரடங்குகள் நீடிக்கப்போவதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலையும் அதன் பரவல் மிகவும் உக்கிரம் அடைந்துள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் டெல்லி,மகாராஷ்டிரா பீகார் போன்ற மாநிலங்களில் நோயின் தாக்கம் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது இதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மே 15ஆம் தேதி வரை அறிவித்திருந்த ஊரடங்கை இப்பொழுது நீட்டித்துள்ளது,அதாவது ஜூன் மாதம் 1 ஆம் தேதி காலை 7 மணி வரை நீட்டித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு..
ஊரடங்கு நீட்டிப்பு..

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல், அம்மாநிலத்திற்குள் வருபவர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.சரக்கு லாட்களில் வருபவர்கள் இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அந்த இருவரும் 48 மணி நேரத்திற்கு முன்னால் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இம்மாநிலத்தில் தொடர்ந்து பீகார் மாநிலத்திலும் நோயின் பரவல் அதிகம் பரவிக் கொண்டிருப்பதனால் அம்மாநில அரசும் மே 15 ஆம் தேதியுடன் நிறைவு பெற இருக்கும் ஊரடங்கு மே 25ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளதாக பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here