தமிழகத்தில் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் பொது ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதனை கேள்விப்பட்ட மக்கள் பலரும் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
பொது ஊரடங்கு
கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மக்கள் கொஞ்ச கொஞ்சமாக மீண்டு வரும் சூழ்நிலையில் இப்பொழுது மூன்றாவது அலையான ஓமிக்ரான் தொற்று பரவி மக்களை மேலும் அச்சுறுத்தி வருகிறது. இத்தனை நாட்கள் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இருந்த தமிழகத்தில் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமையில் கோவில்கள் திறக்கப்படாது என்றும் அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் மற்றுமொரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இனி வரும் வாரங்களில் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்றும் ஏனெனில் இந்த மூன்றாம் அலை தாக்கத்தில் ஓமிக்ரான் தொற்றால் தான் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், டெஸ்ட் ரிசல்ட் வருவதற்குள் அவர்கள் குணமடைந்து விடுகிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க வார இறுதி நாளில் லாக்டவுன் போடப்படுவதால் சின்ன சின்ன வியாபாரிகள் மிகவும் பாதிப்புள்ளாகின்றனர். தடுப்பூசி போட்டு கொண்டவர்களை இந்த ஓமிக்ரான் தொற்று அதிகம் பாதிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இரண்டாவது அலையை ஒப்பிடும் போது மூன்றாவது அலையின் வீரியம் குறைவு தான் என்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு வார இறுதி நாளில் ஊரடங்கு கட்டுப்பாட்டை ரத்து செய்ய தமிழக அரசு தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்