கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. மீண்டும் ஊரடங்கு தொடர்வதால் பரவலை கட்டுக்குள் கொண்டு வர இயலும் என பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
தொடரும் ஊரடங்கு :
2019ம் ஆண்டு துவங்கி இன்று வரை மக்களை பாதித்து அச்சுறுத்தும் கொடிய நோயாக இருந்து வருகிறது கொரோனா வைரஸ். இதனை தடுக்க மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது .
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் அமல் படுத்தப்பட்டது போல் பீகார் மாநிலத்திலும் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்த்தப்பட்டிருந்தது. இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் மக்களை காப்பாற்ற இது போன்ற முயற்சிகளை எடுக்க வேண்டும் என அரசு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்தது.
ஊரடங்கு முடியப்போகும் நிலையில் கொரோனா தொற்று பரவும் விகிதமும் நோய்த்தொற்று பாதிக்கும் விகிதமும் குறையாத நிலையில் ஊரடங்கு மேலும் நீடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு ஜூன் 8 வரை நீட்டிக்கப்படும் என கூறிய அவர் வணிகங்களுக்கு சில தளர்வுகள் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் பொது மக்கள் முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவைகளை கடைபிடிக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.