ஜூன் 10 வரை ஊரடங்கு நீடிப்பு – மாநில அரசு அதிரடி!!

0

கொரோனா பரவல் தற்போது நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் பஞ்சாபில் மேலும் ஜூன் 10 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனை அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு நீடிப்பு:

கொரோனா பரவல் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் பரவ தொடங்கிய இந்த கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வந்தோம். மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கும் திரும்பினர். இந்த சூழலில் இந்த இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பலரும் பீதியில் உள்ளனர். மேலும் இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் பஞ்சாபிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அம்மாநில முதலமைச்சர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஏற்கனவே போடப்பட்ட ஊரடங்கிலிருந்து மேலும் 10 நாட்கள் அதாவது ஜூன் 10 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைகளில் குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here