தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் புதிதாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மாலை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடு
இந்தியாவில் நாள் ஒன்றுக்கு கொரோனா 3 லட்சத்தை தாண்டி பரவிக்கொண்டுள்ளது. மருத்துவர்கள், வல்லுநர்கள் பலரும் போராடியும் கொரோனா கட்டுக்குள் வருவதாக இல்லை. கொரோனா முதல் அலையை விட தற்போது இரண்டாவது அலை பயங்கரமாக பரவி வருகிறது. மார்ச் மாதத்தில் போடப்பட்ட ஊரடங்கு மீண்டும் போடப்படுமா?? என்று மக்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அனாலும் முழு ஊரடங்கு போடுவதற்கு வாய்ப்பில்லை என பல தரப்பில் இருந்து கூறப்பட்டு தான் வருகிறது. இந்த கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த வார இறுதி நாளான ஞாயிறு ஊரடங்கு போடப்பட்டது. ஆனால் இந்த பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!
அதாவது முழு ஊரடங்கு இனி வெள்ளிக்கிழமை மாலையில் ஆரம்பித்து திங்கட்கிழமை காலை வரை போடப்போவதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் முழு ஊரடங்கு போடாமல் வேலை நேரங்கள் குறைப்பு, 50 சதவீத பணியாளர்கள் என அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தமிழக அரசு இன்று மாலை அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.