தமிழகத்தில் சித்திரை, வைகாசி மாதங்களில் இந்து கோவில் ஸ்தலங்களில் திருவிழா, சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மே 5ம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று சிவாலயங்கள் உட்பட பல்வேறு கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் வருகிற மே 31ம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டப்பட உள்ளது. இத்திருவிழாவில் உள்ளூர் மக்கள் முதல் வெளியிடங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் திரளாக கலந்து கொள்வதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.
இதுபோக மே 31ம் தேதி கரூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாற்று அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். இதற்கு அம்மாவட்ட மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.