கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தக்கலை பீர்முகமது ஷாகிப் வலியுல்லா ஆண்டு விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் சொற்பொழிவாற்ற பல்வேறு மாவட்டங்களில் எண்ணற்ற கலைஞர்களும் கலந்து கொள்வார்கள்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன்படி இந்தாண்டுக்கான ஆண்டு விழா கொடியேற்றத்துடன் பிப்ரவரி 6ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சந்தனம் பூசும் விழா, ஞானபுகழ்ச்சி பாடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளது. இதைக்கான ஏராளமானோர் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். இதனால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
மேலும் அனைத்து தரப்பட்ட மக்களும் பங்கேற்கும் விதமாக பிப்ரவரி 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். எனவே, இந்நாளில் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகம், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறையாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.