தமிழகத்தில் சித்திரை மாதம் தொடக்கம் முதல் பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில் ஸ்தலங்களிலும் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் மாவட்ட மக்களிடையே பிரசித்தி பெற்ற தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மே 9ம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், காவடி என நாள்தோறும் நேர்த்தி கடன்களை செலுத்தி வருகின்றனர். மே 16ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த திருவிழாவில் எவ்வித அசம்பாவிதமும் அரங்கேறாமல் தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (மே 12) நடைபெற உள்ளதால் தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் சஜீவனா அறிவித்துள்ளார். எனவே நாளை தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.