தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் முக்கிய பண்டிகையை அனுசரிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் கபூர்தலா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஷேக்பூர் மாதா பத்ரகாளி ஜி-யின் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த ஆண்டு 76வது திருவிழா மே 15ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஷோபா யாத்திரை, கண்காட்சி என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இத்திருவிழாவில் கபூர்தலா மாவட்டம் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொண்டு கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
இனி ஒரு கட்டிலின் விலை ஒரு லட்சம்.., இப்படியே போன நம்ம நிலைமை என்ன ஆகுறது.., வெளியான பகீர் நியூஸ்!!!
இத்திருவிழாவின் மத உணர்வுகள் மற்றும் வரலாற்று சிறப்புகளையும் முன்னிட்டு மே 15ம் தேதி கபூர்தலா மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படாது எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.