உலகெங்கும் திருமண சடங்குகள் முன்னோர்கள் வகுத்த கலாச்சார முறைப்படி பின்பற்றி வருகின்றனர். ஆனால் சமீப காலமாக கள்ளத்தொடர்பு, லிவிங் டு கெதர், ஓரின சேர்க்கை என மிரள வைக்க கூடிய வகை உறவுகளுக்கு நீதிமன்றங்கள் செவி சாய்த்து வருகிறது. மேலும் மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப தம்பதிகளின் குழந்தை கட்டுப்பாடுகளையும் அரசு வகுத்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் தற்போது சீனாவில் பரவி வரும் கொரோனா ஒமிக்ரான் வைரஸால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் பெருகி வருகிறது. இதனால் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு மக்கள் தொகை வீழ்ச்சி பெறத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மக்கள் தொகை வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் புதிய நடவடிக்கையை சீன அரசு அமல்படுத்தியுள்ளது.
அதாவது “லிவிங் டு கெதர் உறவு முறையில் வாழும் தம்பதிகள் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்” என்ற அதிர்ச்சி அறிவிப்பை சீன மக்களுக்கு தெரிவித்துள்ளது. இதனால் இதுவரை திக்கற்று நின்ற லிவிங் டு கெதர் தம்பதிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.