தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை தாறுமாறாக அதிகரித்தது. மேலும் தீபாவளி பண்டிகையின் போது கிட்டத்தட்ட 633 கோடி ரூபாய்க்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் அதிகாரிகள் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது தினமும் தமிழகத்தில் ரூ.110 முதல் 120 கோடி வரை மது பாட்டில்கள் விற்கப்பட்டு வருகிறது ஆனால் நேற்று முதல் கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் பலரும் சபரிமலை கோவிலுக்கு விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதன் காரணமாக அவர்கள் மது குடிப்பதை அறவே நிறுத்தி விடுவார்கள். இதனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மது விற்பனை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.