அனைத்து நாடுகளிலும் இப்போது காதல், கலப்பு, ஒரே பாலினத்தவர்களை சேர்ந்த திருமணம் சகஜமான ஒன்றாகி விட்டது. ஏன் இந்தியாவில் கூட தற்போது இதுபோன்ற திருமணங்கள் அடிக்கடி அரங்கேறி தான் வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தாலும் சிலர் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் தலையிட முடியாது என இது போன்ற திருமணங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். இப்படி இருக்கும் சூழலில் தான் லெஸ்பியன், ஓரினசேர்க்கை, இரு பாலினம், திருநங்கைகள் (LGBTQ) ஆகியோரின் திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என பலர் வழக்கு தொடர்ந்தனர்.
உங்க ஆதார் கார்டில் எந்த மொபைல் எண் இருக்குனு டக்குனு தெரியணுமா? ஈஸியா ஸ்டேப் இதோ!!!
இந்நிலையில் LGBTQ பிரிவின் திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க ஒன்றிய அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் மூலம் கூடிய விரைவில் இந்த திருமண முறைகள் குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.