திரையுலகில் முக்கிய பிரபலமாக இருக்கும் ரஜினி காந்த் எப்பொழுது திரையுலகில் கால் பதிப்பார் என அனைவரும் கெட்டிக்கொண்டிருந்த நிலையில் ஜனவரியில் ஆரம்பிக்கவுள்ளதாக கூறியிருந்தார். இது குறித்து எடப்பாடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
ரஜினிகாந்த்
தமிழில் முன்னணி நடிகராக இருந்து பல ஹிட் படங்களை கொடுத்து சூப்பர்ஸ்டாராக இருப்பவர் தான் ரஜினிகாந்த். பல வருடங்களாகவே கட்சி தொடங்கவுள்ளதாக கூறி வந்தார். இவரது ரசிகர்களும் இவர் எப்பொழுது தொடங்குவார் என்று காத்திருந்தனர். மேலும் மார்ச் மாதத்தில் கூட்டணி தொடங்குவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இடையில் இந்த கொரோனா தொற்று ஏற்படவே இந்த முயற்சியும் பாதியில் நின்றது.
இவர் கட்சி தொடங்குவரா?? மாட்டாரா?? என்று சலித்துக்கொள்ள தான் செய்தனர். கொரோனா காலத்தில் பிரச்சாரங்களில் ஈடுபடுவது எப்படி என்றெல்லாம் பேச்சுக்கள் எல்லாம் எழுந்தது. இந்நிலையில் அவர் ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாக நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்த எடப்பாடி மக்களிடம் பேட்டியளித்தார்.
அதில் ரஜினி அரசியல் கட்சி பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு எடப்பாடி, முதலில் கட்சியை அவர் பதிவு செய்யட்டும். பதிவு செய்த பிறகு இதற்கு பதில் சொல்கிறேன். கற்பனையான விஷயங்களுக்கு எல்லாம் இப்பொழுது பதில் தர முடியாது என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு டிசம்பர் 31 இல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவதாக ரஜினி அறிவித்திருந்த நிலையில் அதற்கு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் கட்சியில் இணைவீர்களா?? என்று கேட்டதற்கு வாய்ப்பு இருந்தால் சேருவேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் ஓ.பி,எஸ் கூறிய இந்த கருத்து அதிமுகவை சேர்ந்தது கிடையாது. இது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று தெரிவித்துள்ளார்.