இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது தவிர அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த விலையேற்றத்தை சாக்காக வைத்து சில கடைக்காரர்கள் அதிக விலைக்கும், தரமற்ற பொருட்களையும் விற்பனை செய்கின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது குறித்து புகார்கள் வந்த நிலையில் தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகள், குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட 2891 கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின் முடிவில் 775 கடைகளில் அதிக விலைக்கு, தரமற்ற பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
11 ஆம் வகுப்பு மாணவர்களே.., தேர்வு முடிவுகள் வெளியீடு.., முழு விவரம் உள்ளே!!!
இதனால் அந்த கடைகளுக்கு ரூ.5000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தவறுகள் மீண்டும் நடந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பொது மக்களும் இது குறித்து புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.