தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை விரிவாக செய்ய வேண்டியிருப்பதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு மிகவும் குறைவு என மாநில தேர்தல் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல்:
வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் விரைந்து செய்யப்பட்டு வரும் நிலையில், அரசியல் களம் விறுவிறுப்பாகியுள்ளது. தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டுமென அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தலை முன்கூட்டி நடத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு கூறியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!
இது பற்றி அவர் “தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. கொரோனா பரவல் காரணமாக ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களின் வசதியின் பொருட்டு கூடுதலாக வாக்குசாவடிகளை அமைக்க வேண்டியிருப்பதால் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான வாய்ப்பு மிக குறைவு” எனவும், தமிழகம் முழுவதும் 67 ஆயிரமாக உள்ள வாக்கு சாவடிகளின் எண்ணிக்கையை 95 ஆயிரமாக மாற்றுவதற்கான நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது” எனவும் கூறியுள்ளார்