ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய 2 ஆம் வகுப்பு மாணவி – என்ன சொல்லி இருக்காங்கனு பாருங்க!!

0

மீஞ்சூரில் வசிக்கும் 2ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி அதிகை முத்தரசி ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தை கட்டி தருமாறு முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஸ்டாலின் கடிதம்:

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மீஞ்சூரில் அமைந்துள்ளது. மீஞ்சூரில் வசிக்கும் அதிகை முத்தரசி 2ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்க கோரியும் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரியும் பலமுறை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்படாததால் வழக்கறிஞரான தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி அதிகை முத்தரசி பள்ளி சீர்கேடு தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்தார்.

இதை தொடர்ந்து இந்த பகுதியில் வசிக்கும் 2ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் மீஞ்சூரில் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தை கட்டி தருமாறு மு.க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பிவைத்துள்ளார். அதை படித்த முதல் அமைச்சர் அந்த பள்ளியை ஆய்வு செய்ய அமைச்சர் சார்பில் அன்பில் மகேஷ் சென்றுள்ளார். அதன் பிறகு அந்த மாணவியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here