திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிறு என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஏன்னெனில் ஒருவரது வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று. அந்த திருமணம் தள்ளி போவதற்கான காரணம் நமது ஜாதக அமைப்பு தான்.
ஜாதக அமைப்பு
முன்ஜென்ம பாவ புண்ணிய அடிப்படையிலேயே நமது பிறந்த ஜாதகம் அமைந்திருக்கும். திருமணமும் இது போன்ற அமைப்பிலேயே இருக்கும். எனவே தான் எந்த ஜாதக அமைப்பு திருமண தடையை ஏற்படுத்தும் என பார்க்கலாம்.
திருமண தடை:
திருமணத்தின் போது பார்க்க வேண்டிய முக்கியமான பொருத்தம்?? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!
- ஒருவருக்கு ராசி கட்டத்தில் 2,4,6,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இதனால் திருமண தடை ஏற்படுகின்றன.
- உங்கள் ராசி கட்டத்தில் ராகு, கேது 5, 7, 8 ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தாலும் உங்களுக்கு திருமண தடை ஏற்படும்.
- உங்கள் ராசிக்கட்டத்தில் சனி மற்றும் செவ்வாய் இணைந்து இருந்தாலும் உங்களுக்கு திருமணம் தாமதமாகும்.
- மேலும் சுக்ரன் உங்கள் ஜாதகத்தில் மறைவிடத்தில் இருந்தாலோ அல்லது நீசமடைந்தாலோ திருமணம் தாமதமாகும். இதற்கு பரிகாரம் செய்த பின்னர் திருமணம் செய்ய வேண்டும்.
- ஜாதக கட்டத்தில் ஏழாம் இடத்திலும், இரண்டாம் இடத்திலும் நீச கிரங்கங்கள் இருந்தால் திருமணம் தாமதமாகும்.
- லக்கினத்தில் ராகு, கேது அமர்ந்திருந்தாலும் திருமணம் தாமதமாகும்.
- சனி பகவான் ஏழாம் இடத்தில் அமர்ந்தால் திருமணத்தில் தாமதம் ஆகும்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆண்களுக்கு திருமண தாமதம் 30 லிருந்து 32 வயது வரை ஆகும். பெண்களுக்கு 28 லிருந்து 29 வரை தாமதமாகும். இதற்கு முருகனுக்கு தொடர்ந்து 10 வாரங்கள் பாலாபிஷேகம் செய்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும். நவகிரக தலங்களுக்கு சென்று பூஜை செய்து வந்தாலும் திருமணம் விரைவில் கைகூடும்.