நாடு முழுவதும் மக்கள் கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். ஆனால் கடந்த 2 மாதங்களில் மட்டும் 99,006 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கும் என கூறி இருந்த நிலையில் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
குழந்தைகளை தாக்கும் கொரோனா:
உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் மக்கள் நோய் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் நோய்த்தொற்றினால் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என கொரோனா தொற்று பரவி வருகிறது. இரண்டாம் அலை தீவிரமாக பரவி அதிகமான மக்களை பாதித்த நிலையில் முன்றாவது அலை வரும் என மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் மூன்றாம் அலை குழந்தைகளை பாதிக்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது மகாராஷ்டிராவில் கடந்து 2 மாதங்களாக 99,006 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெற்றோர்கள் இது மூன்றாவது அலையாக இருக்குமோ என அச்சத்தில் உள்ளனர்.