கண்ணம்மாவிற்கு விஷ ஊசி போட்ட விஷயத்தை கண்டுபிடித்து விடும் பாரதி – சிக்குவாரா வெண்பா??

0

தெலுங்கில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கொஞ்சம் கொஞ்சமாக கார்த்திக்கிற்கு உண்மைகள் அனைத்தும் தெரிய வருகிறது. அதாவது பாரதி கண்ணம்மா சீரியலின் இந்த தெலுங்கு சீரியலின் ரீமேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை தீபம்(பாரதி கண்ணம்மா)

தெலுங்கில் ‘கார்த்திகை தீபம்’ சீரியல் தான் தமிழில் பாரதி கண்ணம்மாவாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒட்டு மொத்த ரசிகர்களும் பாரதியும் கண்ணம்மாவும் எப்பொழுது சேருவார்கள் என்று தான் காத்துக்கொண்டுள்ளனர். அப்படி இருக்க தொடர்ந்து உண்மை தெரியாமலேயே இழுத்துக்கொண்டுள்ளனர். இதனால் பல ரசிகர்கள் கடுப்பாகியும் வருகின்றனர்.

ஐசிசி டி 20 உலக கோப்பை – போட்டி நடைபெறும் மைதானங்கள் பற்றிய விவரம்!!

அதனால் இப்பொழுது தெலுங்கில் வெளியாகும் கார்த்திகை தீபம்(பாரதி கண்ணம்மா) சீரியலில் இன்றைய எபிசோடு பற்றி பார்க்கலாம். ஏற்கனவே கார்த்திக் தீபாவின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரை டிரீட்மென்ட் எடுக்க வைப்பதற்காக உரிமை எடுத்து பழகி வந்தார். அதாவது நான் உன் புருஷன் தாண்டி என்று கத்தி சொல்ல தீபாவும் கார்த்திக் மாறி விட்டார் என்று நம்பி பழக ஆரம்பித்தார்.

ஆனால் இப்பொழுது தான் தீபாவிற்கு தெரிய வருகிறது கார்த்திக் நடிக்கிறார் என்பது. மேலும் கார்த்திக் மௌனித்தாவிடம் (வெண்பா) சென்று தீபாவின் உடல் நிலையை பற்றி சொல்கிறார். அதாவது அவருக்கு யாரோ விஷ ஊசி போட்டிருப்பதாகவும் அதனால் தான் தீபாவின்(கண்ணம்மா) உடல்நிலை இப்படி மோசமாக இருப்பதாகவும் சொல்கிறார். என்ன நடந்தவற்றை கண்டுபிடித்து விட்டார் என்று மௌனித்தா(வெண்பா) ஷாக்காகிறார். இதோடு எபிசோடும் முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here