கடற்கரையோரத்தில் கிடந்த திமிங்கலத்தின் வாந்தியால் ஒரு பெண் கோடீஸ்வரராக மாறியுள்ள சம்பவம் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த ஆச்சரியமளிக்கும் சம்பவம் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது.
கோடீஸ்வரராக மாறிய பெண்
தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த சிரிபான்(49) என்ற பெண் அங்குள்ள கடற்கரை ஒன்றின் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது கடற்கரையின் ஓரத்தில் வித்தியாசமான பொருள் ஒன்று கிடப்பதை கவனித்துள்ளார். அருகே சென்று பார்த்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு கிடைத்த அரியவகை பொருள் என்னவென்றால் திமிங்கலத்தின் வாந்தி. திமிங்கலத்தின் வாந்தியில் அதன் விந்தணு சுரப்பியிலிருந்து வெளிப்படும் மெழுகு போன்ற திரவம் இருக்கும். இதை மூலதனமாக கொண்டு தான் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
50-வது நாளாக திரையரங்கில் வெற்றிநடை போடும் ‘மாஸ்டர்’ – உற்சாகத்தில் ரசிகர்கள்!!
இப்படிப்பட்ட அரியவகை பொருளான திமிங்கலத்தின் வாந்தியை பெற்று கொள்வதற்கு பல முன்னணி வாசனைத்திரவிய நிறுவனங்கள் போட்டி போட்டு கொள்கின்றன. அப்பேற்பட்ட பொருள் தான் தாய்லாந்து நாட்டைசேர்ந்த சிரிபான் என்ற பெண்ணுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், இது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும், இதில் கிடைக்கும் பணத்தினால் தனது குடும்பத்தின் நிலையே மாறப்போகிறது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அவர். இந்திய மதிப்பில் திமிங்கலத்தின் வாந்தியின் விலை 1.3 கோடி ரூபாய் ஆகும்.