மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்.., இனிமேல் இதற்கு தனி வசதி.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

0
மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்.., இனிமேல் இதற்கு தனி வசதி.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!
மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்.., இனிமேல் இதற்கு தனி வசதி.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை எளிமையாக்கும் வகையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயிலில் பயணிப்போருக்கு புதுப்புது திட்டங்களையும், சலுகைகளையும் ரயில் நிர்வாகம் அறிவித்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் இப்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் தினமும் 2,45,000 பயணிகள் பயணம் செய்கின்றனர்.

இவர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையத்தில் 41 நகரும் படிக்கட்டுகள் நிறுவ பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது இதை தொடர்ந்து பொதுதளத்திலிருந்து நடைமேடை 1 மற்றும் 2-க்கு செல்ல கூடுதலாக 2 நகரும் படிகட்டுகள் அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

IPL 2023: பும்ராவுக்கு மாற்று வீரராக இந்திய வீரர்.., மும்பை இந்தியன்ஸ் அணி அறிவிப்பு!!

இந்த திறப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் கூறியதாவது, ” பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும் வகையில் பாலூட்டும் அறை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது”.கூடிய விரைவில் இத்திட்டம் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here