தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழில் புதிய சீரியல் ஒன்றில் களமிறங்கியுள்ளார்.
குஷ்பூ
திரையுலகில் சின்னத்தம்பி படத்தின் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். அடுத்தடுத்த பல படங்களில் நடித்து தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டமே உருவானது. இவருக்கென்று தனியாக கோவில் எல்லாம் காட்டினார்.
தமிழ் திரையுலகில் நாயகி ஒருவருக்கு கோவில் கட்டிய பெருமை இவரை தான் சேரும். அந்த அளவிற்கு பிரபலமானார். இதுவரையிலும் 3 முறை சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.
மேலும் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். அதன் பிறகு தான் இயக்குனரான சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். படங்களுக்கு பிறகு சின்னத்திரையில் கால் பதித்தார். அவரது ‘மருமகள்’ டாப் ஹிட் அடித்தது. அதன் பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்திருந்தார்.
அந்த சீரியல் திடீரென முடிக்கப்பட்டது. அதன் பிறகு அரசியலில் களமிறங்கிய இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் களமிறங்கவுள்ளார். இதனால் அந்த சீரியலுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்