தமிழகத்தில் கோவில் திருவிழா உள்ளிட்டவைகளில் பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சியாக கரகாட்டம், ஆடல் பாடல் அரங்கேற்றப்படுவது வழக்கம். இதில் ஒன்றான குறவன் குறத்தி ஆட்டம் குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினரை தாழ்த்துவது போல, ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலை பிரிவில் இருந்து குறவன் குறத்தி ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் மனுதாரர்களின் விருப்பத்திற்கு ஏற்ப குறவன் குறத்தி ஆட்டத்துக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக மகளிருக்கு மாதம் ரூ.1000.., தகுதியானவர்கள் இவர்கள் தான்.., முழுவிபரம் உள்ளே!!
இதன்படி நாட்டுப்புறக்கலை பிரிவில் வரிசை எண்.40 ல் இடம்பெற்ற குறவன் குறத்தி ஆட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து குறவர் இன உள்ளிட்ட பலரும் இந்த உத்தரவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.