கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை தோற்கடித்து தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து இந்த ஆண்டு மீண்டும் இந்தியாவில் நடைபெற உள்ள ODI உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் 2011ம் ஆண்டு இருந்த சூழ்நிலை தற்போது இல்லை என இலங்கை அணி முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககரா குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்திய மைதானத்தில் ஆசிய கண்ட நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் போன்ற வீரர்கள் மட்டுமே அதிக முறை விளையாடி பழகியிருப்பார்கள்.
காயத்தினால் அணியில் இருந்து விலகிய சஞ்சு சாம்சன்…, ஹர்திக் பாண்டியாவின் எதிரொலி என்ன தெரியுமா??
ஆனால் தற்போது IPL போட்டியின் மூலம் வெளிநாட்டு வீரர்களுக்கு இந்திய மைதானத்தின் ஸ்பின் சூழல் பழகிவிட்டது. மேலும் ஒரு நாள் போட்டிகளில் அணியின் ஸ்கோர் 300 யை கடப்பது சுலபமான செயலாக மாறிவிட்டது. இதனால் இம்முறை நடக்கும் உலக கோப்பை போட்டி இந்தியாவுக்கு மிகவும் சவாலாகத்தான் இருக்கும் என கூறியுள்ளார்.