இந்தியாவில் தொடங்கியது கோவோவாக்ஸ் தடுப்பூசி உற்பத்தி …! – சீரம் நிறுவன தலைவர் வெளியிட்ட தகவல் !!!

0

இந்தியாவில் ஏற்கனவே கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் போன்ற கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் கோவிஷீல்டு  தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம் இரண்டாவதாக கோவோவாக்ஸ் என்னும் தடுப்பூசியின் உற்பத்தியை தொடங்கியதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

சீரம் நிறுவனம் ஏற்கனவே கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு, அஸ்ட்ராஜெனெகா  நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்து வருகிறது. தற்போது அந்த நிறுவனம் மேலும் ஒரு தடுப்பூசியை தயாரிக்க உள்ளது. அதாவது ,அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவோவாக்ஸ் என்று பெயரிடப்பட்ட கொரோனா தடுப்பூசியை தயாரிக்க உள்ளது. அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்தின் இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்க   சீரம் நிறுவனம் சமீபத்தில் தான் அனுமதியை பெற்றது. இதனை தொடர்ந்து அதற்கான உற்பத்தியை தொடங்கி உள்ளது சீரம் நிறுவனம்.

அதாவது  பிரிட்டன் மற்றும் ஆப்பிரிக்க போன்ற  நாடுகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த கோவோவாக்ஸ் தடுப்பூசி 89.3 சதவீதம் சிறப்பாக செயலாற்றி  உள்ளது. மேலும் இது உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகவும் தனது வலிமையை காட்ட வல்லது என தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி கூறியதாவது, கொரோனாவுக்கு எதிரான கோவோவாக்ஸ் தடுப்பூசி உற்பத்தி பணியை தொடங்கி உள்ளதாகவும், அதற்கான பரிசோதனைகளை கூடிய சீக்கிரம் முடிந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த தடுப்பூசியானது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிறப்பாக செயல்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்து உள்ளார். இது சீரம் நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான 2வது தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here