கோவையில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை – மாவட்ட ஆட்சியரின் எதிர்ப்பை தொடர்ந்து ட்வீட்டை நீக்கிய ஏ.என்.ஐ செய்தி நிறுவனம்!!

0

கோவை மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற மாவட்ட ஆட்சியரின் பதிவை அடுத்து, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தனது பதிவை ட்விட்டரில் நீக்கியுள்ளது.

வைரஸ் தாக்கம் இல்லை:

உலகம் முழுவதும் கோவிட் -19 வைரஸின் தாக்கம் விஸ்வரூபமாக பரவி உள்ளது. இதை தடுக்க தடுப்பூசி செலுத்துதல் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், பல்வேறு  கட்டுப்பாடுகளை விதித்து தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறது.  இந்த நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் பரவலின் ஆட்டம் முடிவுக்கு வராத நிலையில் அங்கு புதிதாக நிபா வைரஸ் பரவி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.


கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த வைரசால், ஒரு சிறுவன் இறந்தான்.  இதுவே மாநிலத்தின் முதல் நிபா வைரஸ் பலியாக பார்க்கப்பட்டது.  இந்த வைரஸ் தமிழகத்திற்கு வந்து விடக் கூடாது என்பதற்காக தமிழக-கேரள எல்லை பகுதிகளில் மிகுந்த கண்காணிப்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிலையில், தமிழகத்தில் இது சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


இதில் குறிப்பாக, தற்போது கோவை மாவட்டத்தில் இந்த வைரஸின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம்  ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.  இதனை மறுத்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், இது தவறான தகவல் என்று மறுப்பதிப்பை பதிவிட்டார்.  இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட ஏ.என்.ஐ செய்தி நிறுவனம்   தனது ட்விட்டர் பதிவை நீக்கியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here