மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் – போக்சோவில் தற்போது கைது!!

0

கோவை மாவட்டம் வெள்ளலூரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்து வந்த கணித ஆசிரியர் விஜய் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

போக்சோவில் கைது:

கோவை மாவட்டம், வெள்ளலூர் என்ற பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு அந்த கிராமத்தை சுற்றியுள்ள பல மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 47 வயது மிக்க விஜய் ஆனந்த் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்தப் பள்ளியில் படிக்க கூடிய 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் சிலருக்கு பாலியல் சீண்டல் செய்துள்ளார். மேலும் வாட்ஸ் அப்பில் ஆபாச குறுந்தகவல் மற்றும் புகைப்படங்களை அனுப்பி மாணவிகளை தொந்தரவு செய்துள்ளார்.

வாட்ஸ் அப் வீடியோ காலில், டி ஷர்ட் போட்டு காண்பியுங்கள் என இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார். இதனால் பொறுமை இழந்த மாணவிகள், ஆசிரியருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் கீதா ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தற்போது விஜய்யை கைது செய்துள்ளனர்

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here