கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு சம்பந்தமாக உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கூடுதல் காரணங்களை விளக்கிக் கூற வேண்டும் என்று மனுதாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கானது செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை:
கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்படுபவர்கள் சயான் மற்றும் வாளையாறு மனோஜ். இவர்களை தவிர இன்னும் 10 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, திவாகர், சஜீவன், முன்னாள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர், முன்னாள் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், தடவியல் நிபுணர், கோத்தகிரி மின்வாரிய உதவி பொறியாளர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள மனு தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது செப். 02 கோடநாடு கொலை, கொள்ளை வழக்கானது விசாரணைக்கு வந்தது. இதில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கூடுதல் காரணங்களை விளக்கக்கூறி மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றமானது உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கக் கோரி கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீஷன் உள்ளிட்டோறும் மனுத்தாக்கல் செய்தனர். தற்போது இந்த வழக்கு செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்