நாட்டில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மீன்பிடி மற்றும் கால்நடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் சிறு நிலமற்ற விவசாயிகளுக்கு “கிசான் கிரெடிட் கார்டு” வழங்கும் திட்டம் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதன் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மானியமாக 2% வட்டி வழங்குவதால் 7% வட்டி மட்டுமே திருப்பி செலுத்த வேண்டி வரும். அதோடு கடனை ஒரு வருடத்திற்குள் திரும்ப செலுத்தினால் 4% வட்டி விகிதம் மட்டுமே வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கிசான் கிரெடிட் கார்டை பெற்றுள்ளனர்.
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம் (04.05.2023)., முழு விவரம் உள்ளே!!!
இந்நிலையில் மத்திய நிதி சேவை துறையுடன் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைகள் இணைந்து “நாடு தழுவிய கிசான் கடன் அட்டை பிரச்சாரம்” மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சாரம் மே 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.