தென்காசியில் காதல் திருமணம் செய்து கொண்ட கிருத்திகாவை கணவர் வினித்திடம் இருந்து வலுக்கட்டாயமாக அவரது பெற்றோர் அண்மையில் கடத்தி சென்றனர். இது தொடர்பாக குற்றாலம் போலீசார் கிருத்திகாவின் பெற்றோர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் இச்சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய கால தாமதமானதாக தகவல் வெளிவந்தது. இதுகுறித்து காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது “கடத்தல் விவகாரங்களில் FIR பதிவு செய்ய எஸ்.பி. அதிகாரிகளின் அனுமதிக்காக போலீசார் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மதுரையில் மெட்ரோ ரயில் சேவை., 3 ஆண்டுக்குள் முடிக்க திட்டம்! எந்தப் பகுதியில் தெரியுமா?
பதற்றமான விவகாரம் உடைய முக்கிய வழக்குகளில் காவல்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி அறிவிப்பை பொதுமக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.