நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள்… வெளியான பகீர் தகவல்!!!

0

சமீபகாலமாக பல பிரபலங்களின் ட்விட்டர் பக்கத்தில் பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை குஷ்பு அவர்களின் ட்விட்டர்  பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டு உள்ளது. மேலும் அவரின் அனைத்து ட்வீட்களும் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில வருடங்களாக பல பிரபலத்தின் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்து வருகிறது. மேலும் அவர்களின் கணக்குகள்  முடக்கப்படுவதும், ஹேக் செய்யப்படுவதும் என பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை குஷ்பு அவர்களின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கி உள்ளனர். சினிமா துறையில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்து மிக பிரபலமாக இருப்பவர் குஷ்பு. இவர் தற்போது அரசியலிலும் இறங்கி உள்ளார்.

இந்நிலையில் அவரின் ட்விட்டர் பக்கத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முடக்கி உள்ளனர். மேலும் அவரின் அனைத்து ட்விட்டர் பதிவுகளும் அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவரின் இந்த ட்விட்டர் பக்கத்தை மீட்டு எடுக்க குஷ்பு தரப்பில் தொழில்நுட்ப வல்லுநர்களை நாடி வருவதாகவும், கூடிய விரைவில் அந்த பக்கம் மீட்கபடும் எனவும் தெரிவித்து உள்ளனர். திரைத்துறை மற்றும் அரசியலில் பிரபலமாக இருக்கும் குஷ்பு அவர்களின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here