பிரபல நடிகையான குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
குஷ்பூ
80ஸ், 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்த குஷ்பூ இப்போது நடிப்பு, பட தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக திறமைகளோட வலம் வருகிறார். எப்போதும் பிசியாக இருக்கும் இவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அதாவது தற்போது பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. டெல்லியில் கூட நேற்று இரவு 10 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்து கீழே விழுந்ததால் மக்கள் அனைவரும் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இது குறித்து குஷ்பு வெளியிட்ட ட்விட்டர் பதிவில் டெல்லியில் சுமார் 4 4 நிமிடம் வரை நீடித்த நிலநடுக்கத்தால் வீட்டில் உள்ள மின்விசிறி, விளக்குகள் அடைந்ததாகவும், சோபாவின் அடியில் இருந்து சத்தம் கேட்டதாகவும் பதிவிட்டுள்ளார். நிலநடுக்கத்தால் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி தெருவில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Tremors last for about 4 minutes. Looking at fans and chandeliers moving on their own, sofas rumbling as if there’s a silent generator beneath it, tells you to move out fast. And we did just that. All quite for now. Back home. Stay safe and take care.
— KhushbuSundar (@khushsundar) March 21, 2023