கொரோனாவால் வாடும் மக்களுக்கு 1.5 கோடி வரை உதவி செய்த KGF நாயகன் – படத்துல மட்டும் இல்ல சார் நிஜத்துலயும் நீங்க ஹீரோ தான்!!

0

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் KGF நாயகன் யாஷ் மக்களுக்கு 1.5 கோடி கொடுத்து உதவியுள்ளார்.

KGF நாயகன்:

நாடு முழுவதும் கொரோனா தொற்று காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில் நோய்த்தொற்று பரவும் விகிதத்தை குறைக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். எனவே மக்களுக்கு அரசு தரப்பில் சிறு உதவிகள் செய்யப்படுகிறது. இருப்பினும் ஊரடங்கின் காரணமாக வேலை இல்லாமல் வருமானமின்றி பலர் வட்டி வருகின்றனர்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறு சிறு டெக்னீஷியன்ஸ் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உதவும் நோக்கில் நடிகர்கள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தற்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் மிக பெரிய உதவியை செய்து ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்துள்ளார் நடிகர் யாஷ்.

KGF திரைப்படம் மூலம் பிரபலமாகி ரசிகர்களை கவர்ந்த நடிகர் யாஷ் தற்போது 3000 குடும்பங்களுக்கு தலா ரூ.5000 என நிதி அளித்து உதவியுள்ளார். இதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here