முதன் முதலாக குழந்தையை கருவில் சுமக்கும் மூன்றாம் பாலின தம்பதி.., கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

0
முதன்முதலாக குழந்தையை கருவில்  சுமக்கும்  மூன்றாம் பாலின தம்பதி.., கர்ப்பகால  போட்டோஷூட் வைரல்!
முதன்முதலாக குழந்தையை கருவில்  சுமக்கும்  மூன்றாம் பாலின தம்பதி.., கர்ப்பகால  போட்டோஷூட் வைரல்!

கேரளாவில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முதல் மூன்றாம் பாலின தம்பதியாக அங்கீகாரம் பெற்றவர்கள் தான் சஹத்-ஜியா. இதில் சஹத் பிறப்பால் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். ஜியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு கட்டத்தில் தங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் அரசாங்கத்திடம் குழந்தை தத்தெடுக்க முடிவெடுத்தனர்.ஆனால் இவர்கள் மூன்றாம் பாலினம் என்பதால் இவர்களால் குழந்தையை தத்தெடுக்க முடியவில்லை. அந்த நேரத்தில் சஹத் பிறப்பால் பெண் என்பதால், இவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற யோசனை ஜியாவுக்கு தோன்றியுள்ளது இதனால் பலதரப்பட்ட யோசனைகளுக்கு பிறகு தங்களின் குழந்தையை தாங்களே பெற்றெடுக்க முடிவு எடுத்துள்ளனர்.

இந்நிலையில் தங்களின் குழந்தையை அப்பா என்ற ஸ்தானத்தில் சஹத் தன் வயிற்றில் சுமக்கிறார். தற்போது இவர்களின் குழந்தை கருவுற்று 9 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இவர்கள் போட்டோ ஷூட் எடுத்துள்ளனர். மேலும் தன் குழந்தையை சுமக்கும் ஒரு தந்தையாக சஹத் பெருமிதம் அடைகிறார். இந்நிலையில் இவர்களின் baby shower புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here