அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் பெண் ஆசிரியர்கள் பிரசவத்திற்கு உடலளவிலும் மனதளவிலும் தயாராகும் விதம் 6 மாதங்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புகளை கேரளா அரசு வழங்கி வருகிறது. இதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜூன் 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மகப்பேறு விடுப்பு எடுத்தவர்களில் ஒரு சிலர் கோடை விடுமுறையை கணக்கில் கொள்ளாமல் விடுமுறையை தொடர்ந்து வருகின்றனர்.
அதாவது ஜனவரி மாதத்தில் மகப்பேறு விடுப்பு எடுத்தவர்களுக்கு ஜூன் மாதம் முதல் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கோடை விடுமுறை 60 நாட்களை நீட்டித்து ஆகஸ்ட் மாதம் முதல் பள்ளிக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இதுபோன்று விடுமுறையை நீட்டித்தால் அவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என உத்தரவு பிறப்பித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.