இஸ்ரேலில் ஹமாஸ் குழு நடத்திய ராக்கெட் தாக்குதலில் பலியான இந்தியாவின் கேரளாவை சேர்ந்த சௌமியா சந்தோஷ் என்ற செவிலியரின் உடல் தற்போது டெல்லி வந்தடைந்தது. இவரின் இறப்புக்கு இந்திய வெறியுறவு துறை அமைச்சர் வி.முரளிதரன் அவரின் ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று எதிரொலி – மாநில முதல்வரின் சகோதரர் மரணம்!!
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில தினங்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதனிடையே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது.இந்த வான்வழி தாக்குதலில் இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சௌமியா என்ற செவிலியர் ராக்கெட் ஏவுகணையிலிருந்து வெடித்த சில உதிரி பாகங்கள் அவர் வசித்துவந்த கட்டிடத்தின் மீது விழுந்ததில் கட்டிடம் இடிந்து அதில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இவ்வாறு எதிர்பாரத விதமாக உயிரிழந்த சவுமியாவின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான ஆவணங்கள் இஸ்ரேல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் தலைநகர் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது, பின் அங்கிருந்து தனி விமானத்தில் கொச்சிக்கு எடுத்து செல்லப்படுகிறது. பின்னர் சவுமியாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.