ஊரடங்கில் தளர்வுகள்: அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க மாநில அரசு அனுமதி!!!

0

கேரள அரசு தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்ளும்   ஜூன் 7 முதல் சுழற்சி அடிப்படையில் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கேரளா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 8 ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் மும்மடங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

 

பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜயன் மே 29 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். தற்போது இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அரசு அலுவலகங்கள்  ஜூன் 7 முதல் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய வழிகாட்டுதல்கள் அடிப்படையில் மக்கள் காலை 5 மணி முதல் காலை 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளிய வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here