கலப்பு திருமணங்கள் செய்து கொள்ளும் தம்பதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கென பாதுகாப்பு இல்லங்கள் கட்டித்தர கேரள அரசு முடிவு செய்துள்ளது.
ஆணவக்கொலைகளை தடுக்க முயற்சி..!
இந்தியா முழுவதும் ஜாதி, மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூலமே ஆணவக்கொலை செய்ப்படுவது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் கேரள அரசு இறங்கியுள்ளது. இதற்காக கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் தங்கிக்கொள்ளும் வகையில் பாதுகாப்பு இல்லங்களை ஏற்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இல்லங்கள், நிதிஉதவி..!
இந்த பாதுகாப்பு இல்லங்களில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஒரு வருடமோ அல்லது பாதுகாப்பாக உணரும் வரையிலோ தாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது. இந்த புதிய திட்டம் விரைவில் கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டுவரப்பட உள்ளது. மேலும் கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினருக்கு ரூ. 75,000 நிதியுதவி ஆகவும் வழங்கப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |